தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுவரை கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று பணிபுரிய விரும்பினால் எமிஸ் இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் நடத்தி தேவையான பணியிடங்களை தேர்வு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.