இந்திய ரயில்வேயில் 5,696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் என ரயில்வே துறையில் தெரிவித்த நிலையில் வயது வரம்பு உயர்த்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் எஸ்சி மற்றும் எஸ்டி களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது.