தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகப் பள்ளிகளில் அமலில் உள்ள காலை உணவு திட்டம் குறித்து அறிந்து கொள்ள தெலுங்கானா உயர் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தார்கள். அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

அதன் பிறகு தங்களுடைய மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார்கள். மேலும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டு இந்த மாதம் முதல் நீட்  உள்ளிட்ட உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.