மேற்குவங்க மாநிலம் சிலிகுரில் ஜூன் ஒன்பதாம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 250- க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாம்பழ கண்காட்சியில் உலகின் விலை உயர்ந்த மியாசாகி வகை மாம்பழம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 2.75 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் ஏராளமானவர் இந்த மாம்பழத்தை பார்த்து கண்டு களித்து வருகின்றனர். வழக்கமாக ஜப்பானில் காணப்படும் ரியாசகி மாம்பழம் தற்போது இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளது.