விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டு எதிரி விலங்குகள் சந்தித்தால், பெரும்பாலும் அவை சண்டையிடும். ஆனால் வினோதமாக ஒரு பாம்பும் பசுவும் இந்த வீடியோவில் நெருக்கமாக உரையாடுகின்றது. பாம்பு பசுவின் முகத்தை முத்தமிட்டபோது, அந்த பசு மாடு எதுவும் செய்யாமல் நின்றது.

இது எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.