உலகின் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி .இவருடைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வருகிற மார்ச் மாதம் முதலாம் தேதி பிரமாண்ட திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவீட்டார் சம்மதத்தோடு கடந்த ஜனவரி மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சும்மாவா? இதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீதா அம்பானி தன்னுடைய இளைய மருமகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். முதல் முறையாக வெளியில் செய்யப்பட்ட லட்சுமி விநாயகர் சிலையை வழங்கி இருக்கிறார்.

மேலும் முகேஷ் அம்பானி சுமார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் வழங்கியுள்ளார். ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். ஆகவே மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ஒரு பிரம்மாண்டமான அரங்கேற்றத்தையும் செய்துக்கொடுத்துள்ளார்கள்.