அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவாலை நீட்டித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-வது முறையாக நீட்டித்து 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி ஆனந்த் உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.