அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி மாகாணத்தில் சூறாவளிப்புயல் ஏற்பட்டுள்ளது. பழத்த மழையுடன் ஏற்பட்ட இந்த புயலால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வாகனங்கள் போன்றவை பெரிதும் சேதம் ஆகியுள்ளன. மரங்கள் மின்கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது.

இந்த புயல் தாக்குதலில் 23 பேர் காயமடைந்த நிலையில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு புயலினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 85 ஆயிரம் குடும்பங்கள் இருளில் தவித்தனர். அதோடு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.