ஆனி மாத பிரதோஷம் , அமாவாசை வழிபாட்டுகளை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று ஜூன் 15 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தில் சாப்டூர் வனச்சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு செல்ல விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதி அருகே தாணிப்பாறை வழியே செல்ல வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி , பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.