பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி இந்த ஜனாதிபதியான துரோபதி முர்மு  அவர்களுக்கு மனு ஒன்றை சீமாவின் வழக்கறிஞர் அளித்துள்ளார்.

அதில் சீமாவுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர் சில எடுத்துக்காட்டுகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கனடா குடியுரிமையைக் கொண்ட நடிகர் அக்ஷய் குமார் நீண்ட காலமாக இந்தியாவில் தான் வசித்து வருகிறார் என சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் அந்த மனுவில் சீமாவின் வழக்கறிஞர் காதலுக்கு கண் இல்லை என்பதற்கு சான்றாக தனது காதலுக்காக நாடு கடந்து சீமா வந்துள்ளார். சீமா-சச்சினின் இந்த காதல் எதிர்காலத்தில் லைலா – மஜ்னு காதலைப் போன்று நினைவு கூறும் ஒன்றாக இருக்கும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.