பொதுவாகவே தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலை அணிந்து இருப்பதை பார்த்திருப்போம். அதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் உள்ளதாக பல செய்திகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கருங்காலி மாலை அணிவதில் எந்த நம்பிக்கையும் இல்லை என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இனிமேல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது நண்பர் வாங்கி கொடுத்ததால் இந்த மாலையை அணிந்து உள்ளேன். மற்றபடி இதில் எந்த நம்பிக்கையும் இல்லை. இதை அணிந்து கொண்டால் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி குறையும் என்று கூறி நண்பர் தான் இதை அணிவித்தார். மறுக்க முடியாததால் அதைப் போட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.