தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூரி. இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

இந்நிலையில் அன்று நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடத்தில் தான் இப்போது என்னுடைய அலுவலகம் உள்ளது என சூரி கூறியுள்ளார். இதை தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தின் ஆடிஷனுக்குச் சென்று இருந்தேன். நிறைய கூட்டம் இருந்தது. அப்போது சாப்பிடாமல் சென்றதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பிறகு சுசீந்திரன் அண்ணன் அவர்கள் வெண்ணிலா குழு திரைப்படத்தில் என்னை நடிக்க வைத்தார். நடிகரான இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனக்காக தனியாக ஒரு ஆபீஸ் தேவைப்பட்டது. அதனால் நான் மயங்கி விழுந்த அதே தற்போது என்னுடைய ஆபீஸ் உள்ளது இன்று மனம் திறந்து பேசி உள்ளார்.