நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்றுள்ளார்.

என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன்.. நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவளுடைய பெயரில் நான் செய்யப் போகும் அனைத்து நல்ல காரியங்களையும் அவளே தொடங்கி வைத்தால் என்ற விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.