தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் நேற்று அறிவித்த நிலையில் இந்த நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தெளிவு இன்னும் இல்லாத நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒருவர் கூட விட்டுப் போகாத வண்ணம் நிவாரணம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.