தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது.

இந்த நிலையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 11 முதல் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு வாரமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் செயல்படவில்லை. அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் நாளை நிலைமை சீரடையும் என்றும் அனைத்து பள்ளி கல்லூரிகளும் நாளை முதல் வழக்கம்போல செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.