தமிழக மீனவர்களுக்கு 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால் பகுதிகளில் இருந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்ட 25 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கியது இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம். இலங்கை பருத்தித்துறை துணை நீதிபதி உத்தரவை அடுத்து மீனவர்கள் 25 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.