வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கும் ஒப்பந்தத்தில் வங்கிகள் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது. மங்கி ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற உள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான அரசு ஒப்புதல் பெறப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் வங்கிகள் இயங்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுகிறது.