நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்  கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் கேஒய்சி அப்டேட் செய்யாத விவசாயிகளுக்கு 17வது தவணைத் தொகை கிடைக்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பயனாளிகள் கேஒய்சி மற்றும் NPCI கட்டாயம் செய்திருக்க வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் இணைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.