சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய மகள் ஜனனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் அறையில் இருந்த கடிதத்தில், எனக்கு தற்போதெல்லாம் 3 படத்தில் வருவது போல கனவு வருது. மேலும் தூக்கு போட்டுக் கொள்வது போல எனக்கு கனவு வருது. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.