தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் நிதி இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு பாஜக தலைமை தன்னிடம் பேசியதாகவும், ஆனால் அந்த அளவுக்கு தன்னிடம் பண பலம் இல்லை என அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள அவர், தமிழக அல்லது ஆந்திரா ஆகிய மாநிலங்களில் எங்கிருந்து போட்டியிடுவது என்ற குழப்பமும் இருந்ததால் தேர்தலில் போட்டியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.