சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே மற்றொரு குடியிருப்பின் பால்கனி மேலே ஏறிய இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.