தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லியூர் கிராமத்தில் 35 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதேபோல் இருக்கும் டாஸ்மாக் கடையில் ராஜு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜு அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதும் ராஜு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.