தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் மீட்பு, நிவாரண பணிகளுக்கு மத்தியில் இயக்குநர் மாரி  செல்வராஜ் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சென்றதற்கு விமர்சனம் எழுந்தது.

இந்த விமர்சனத்திற்கு தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு. “அது அவன் ஊரு. அந்த ஊரில் பள்ளம், மேடு எங்கே இருக்கு என்பது அவனுக்குத்தான் தெரியும். அவன் ஊரில் வெள்ளம் வந்தா அவன் போகாமல் வேறு யார் போவார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை” என பேசியுள்ளார்.