தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தென் மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர், நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் 4 மாவட்டங்களிலும் இன்று முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல, சென்னை மக்களுக்கும் அவர் உதவியது குறிப்பிடத்தக்கது.