நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உள்பட 6 பேர் திருச்சூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சூரில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் கேரளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை அழைத்து வர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அழகப்பன் நாச்சியம்மாள் ஆகியோருக்கு லூக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர். தனக்கு சொந்தமான 8.53 ஏக்கர் நிலத்தை விற்றதில் பண மோசடியில் ஈடுபட்டதாக கௌதமி புகார் அளித்திருந்தார். நிலத்தை வாங்கியது தொடர்பான விவகாரத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக கௌதமி புகார் அளித்திருந்தார்