கேரளா திருவனந்தபுரம் நகரில் தம்பனூர் எனும் பகுதியில் சென்ற 12ம் தேதி காலை 11 மணியளவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த கர்ப்பிணி பெண்ணைத் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

பெண்மணி வேகமாக நடந்து சென்றபோதும், விரட்டி வந்து அந்நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின் அந்த பெண்மணி கூச்சலிட்டதும், நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எனினும் இதுகுறித்து அந்த பெண் புகாரளிக்கவில்லை. இருப்பினும் காவல்துறையினர் இது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.