ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஆழ்துளை கிணறில் விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது.