மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 40 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதிய உணவில் பாம்பு விழுந்துள்ளது. அதை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்தபோது, சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சமையல் பொருள்களில் பாம்பு இருந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.