சமூக ஊடகங்களில் தற்போது ஒரு காயமடைந்த சிறுத்தைப் புலி மீட்கப்பட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பிரேசிலின் ரியோ நீக்ரோ ஆற்றில் காயமடைந்த ஒரு சிறுத்தைப் புலி தண்ணீரில் மிதந்து, தத்தளித்து நீந்த முயற்சிக்கிறது. அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், உள்ளூர் நிர்வாகமும் இராணுவக் குழுவும் இணைந்து, ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கை மூலம் இந்த காயமடைந்த விலங்கை காப்பாற்றினர். வீடியோவில், சிறுத்தைப் புலி மிகவும் பலவீனமாகவும், காயமடைந்து சோர்ந்தும் காணப்படுகிறது. இருப்பினும், அது தண்ணீரில் மிதந்து தனது உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது.
Rescuers in Brazil pulled an injured jaguar from the Rio Negro after finding it struggling to stay afloat with gunshot wounds. The big cat is now receiving care from wildlife specialists. pic.twitter.com/9jPodOQbRQ
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) October 9, 2025
அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கி, தண்ணீரில் ஒரு மிதவை சாதனத்தை (Floating Device) வீசினர். இதை சிறுத்தைப் புலி பிடித்துக்கொண்டு, படிப்படியாக இராணுவத்தினரின் படகை நோக்கி நீந்தியது. பின்னர், குழுவினர் அதை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். கரையில், அமேசான்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்களும், விலங்கு பாதுகாப்பு துறையினரும் ஏற்கனவே தயாராக இருந்தனர். அவர்கள் உடனடியாக சிறுத்தைப் புலிக்கு சிகிச்சை அளித்தனர். பரிசோதனையில், ஜாகுவாரின் உடலில் பல குண்டுகள் பாய்ந்திருந்ததும், அதன் பற்கள் உடைந்திருந்ததும், குண்டின் துண்டுகள் உடலில் ஆழமாக பதிந்திருந்ததும் தெரியவந்தது.
