மதுரை வலையங்குளத்தில் அதிமுக மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக வேண்டும்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் உட்பட 32 தீர்மானங்கள் இந்த அதிமுக மாநாட்டில் இயற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் இந்த முதல் அதிமுக மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.