என்.டி.ஏ கூட்டணியை விட்டு வெளியேறினால், அதிமுகவை இரண்டாக உடைத்து விடுவோமென இபிஎஸ்ஸை பாஜக மிரட்டியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். நாகையில் பேசிய அவர், “இ.டி., ஐ.டி., சி.பி.ஐ., ரெய்டு வரும் என அச்சுறுத்தினர். முக்கியமானவர்களை தூக்கி விடுவோம் என எச்சரித்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல், இனி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் அறிவித்தார்” எனக் கூறினார்