ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “உங்களை நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்.

ஈரோடு இடைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளீர்கள். இந்த 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது உங்களின் வெற்றி. அதிமுகவில் எத்தனை அணி இருக்கிறது என்றே தெரியவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா, ஜெ.தீபா என இத்தனை அணியுள்ள நிலையில், அதிமுகவிற்கு தனி ஐபிஎல் நடத்தலாம். அந்த அளவுக்கு அதிமுகவிற்குள் அணி இருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் மக்களை சந்திப்பது தி.மு.க இல்லை. நாங்கள் கூறியதை காப்பாற்றி உள்ளதால் தான் வெற்றியைத் தந்துள்ளீர்கள்” என்று அவர் பேசினார்.