தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா நேற்று புதிய உச்சமாக 49 பேருக்கு உறுதியாகி உள்ளது.

சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா கண்டறியப்பட்டதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் பொதுமக்கள் பொதுவெளியில் கட்டாயம் முக கவசம் மற்றும் தனிமனித இடைவேளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் கொரோனா உயர்ந்தால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.