தமிழகத்தில் அண்ணாமலை முதல்வராவது எல்லாம் நடக்காத விஷயம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பாடல்களை பாடி அசத்தினார். அதன் பிறகு தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, அண்ணாமலை முதல்வராவதெல்லாம் இலவு காத்த கிளி போல தான், அதெல்லாம் நடக்காத விஷயம். 2026 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். உலக அளவில் போற்றப்படும் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு அண்ணாமலை வாழ்த்து சொல்வதை பெரிய விஷயம் தான். ஆனால் அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.