ஜல்லிக்கட்டை, தமிழ்நாடு அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து, மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் வீரம் வீணாகாது தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல என்பதை உலகிற்கு சொல்லும் வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.