கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை, மாநில சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய நிலையில், அவர் கீழ் பணியாற்றியுள்ள காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி கட்சிக்கு தேவையான பணம் மற்றும் ஆட்கள் உதவியை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.