டெல்லியை சேர்ந்த ஹரேந்திரா என்பவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அண்ணன் படும் வேதனையை பார்த்து அவரது தங்கை பிரியங்கா 23 வயது ஆகும் நிலையில் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்தார். முதலில் அவரது குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் பிரியங்கா விடாப்பிடியாக தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக வழங்க உறுதியாக இருந்தார்.

சமீபத்தில் இந்த அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஹரேந்திராவும் அவரது தங்கை பிரியங்காவும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாசக்கார தங்கையின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.