39 வயதான மெலடி ஜான்சன், தனது கணவர் ராபி ஜான்சனின் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் குடிக்கும் காபியில் தொடர்ச்சியாக ‘ப்ளீச்’ (Bleach) கலந்து வந்துள்ளார். காபியின் சுவை மாறியதால் சந்தேகமடைந்த விமானப்படை வீரரான ராபி, ரகசிய கேமராக்களைப் பொருத்தி மனைவியின் கொடூரச் செயலை ஆதாரத்துடன் பிடித்தார்.

இவ்வளவு வலுவான வீடியோ ஆதாரம் இருந்தும், அவருக்கு சிறை தண்டனை இன்றி வெறும் 3 ஆண்டுகள் கண்காணிப்பு (Probation) மட்டுமே வழங்கப்பட்டது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தீர்ப்பு உண்மையில் சட்டத்தின் ஓட்டையா அல்லது பெண் என்பதால் ஒருதலைப்பட்சமான சலுகையா? என்று பிரிட்டிஷங்கள் கருத்துக்களை பதவி விட்டு வருகின்றனர்.