ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நாட்களில் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை சீனாவை சேர்ந்த PANG DONG LAI என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த புதிய சலுகை வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் இதன் மூலமாக நிம்மதியாக பணியாற்றலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தனது வளர்ச்சிக்காகவும் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.