தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும் புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி சில வாரங்களே ஆகியுள்ளது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவதற்காக சைக்கிள் உதிரி பாகங்கள் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு அவை அனைத்தும் முறையாக பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் இலவச சைக்கிள்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.