ஆந்திரா மாநிலம் பார்த்திச்செனு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரை டி.சாடமூர் அருகில் 2 காட்டு யானைகள் தாக்கி மிதித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோன்று சப்பாணி குந்தா கிராமத்திலும் அதே 2 யானைகள் தாக்கி சிவலிங்கம் என்ற விவசாயி இறந்தார்.

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் 4 உயிர்களை காவு வாங்கிய அந்த இரண்டு யானைகளின் நடமாட்டம் பற்றி ஆந்திர வனத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த இரண்டு யானைகளால் மேலும் உயிரிழப்பு நிகழாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஆந்திர வனத்துறையினர் இறங்கி உள்ளனர்.