சென்ற பிப்ரவரி 27-ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தன் பெண் தோழியை மகிழ்ச்சிப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து, இச்சம்பவம் பற்றி விமானப் போக்குவரத்து இயக்குனரகம்(டி.ஜி.சி.ஏ.) விசாரணை மேற்கொண்டது.

இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர் என்பதும், சம்பவ நாளன்று அவர் அதே விமானத்தில் பயணியாக சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் உடனே செயல்பட்டு நடவடிக்கை எடுக்காத காரணத்துக்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.