மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில் வசித்து வருபவர் சமீர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகராக வரும் சல்மான்கானின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த டிச.27 ஆம் தேதி சல்மான்கான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரை பார்ப்பதற்காக சமீர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முடியாமல் போனது. தற்போது அவரை சந்திப்பதற்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து சைக்கிளில் பயணம் மேற்கொள்ள சமீர் திட்டமிட்டார்.

ஒரு வழியாக 1,100 கி.மீ பயணம் மேற்கொண்டு, அவரது வீட்டுக்கு சமீர் வந்தடைந்தார். அதன்பின் சமீரின் வருகையை அறிந்த சல்மான்கான், அவரை வரவழைத்து சிறிது நேரம் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து சல்மான்கானுடன் சமீர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.