ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் சிம்ஹாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வராஹ லக்ஷ்மிநரசிம்மர் கோயில் உள்ளது. இந்த கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் செலுத்திய 100 கோடி ரூபாய்க்கான காசோலை கிடந்துள்ளது. இதனை கண்டு கோயில் அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற அந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் என்னும் பணி நடைபெறும்.

வழக்கம் போல், இம்முறையும் கோயிலின் உண்டியலில் பணத்தை எண்ணும் போது 100 கோடி ரூபாய்கான செக் இருந்துள்ளது. அதில் கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தின  100 கோடி ரூபாய் செலுத்திய பக்தர் பொட்டேபள்ளி ராதா கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார்