ஜி-20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜி-20 மாநாடு நடக்கும் நாட்களில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மூடப்படும்.

இதனால் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என பணியாளர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல், ஏற்கனவே ஜி 20 மாநாடு நடக்கும் அந்த நாட்களில் அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.