தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1-3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,22ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. 4-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,27ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினமும், 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும் சனிக்கிழமைகளில் வருகின்றன. இதனால் 1-3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாட்களும், மற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரையும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.