சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில  சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் தன்னிடம் 5000 புடவைகள் இருப்பதாகவும் பெங்களூரில் உள்ள பிளாட் முழுவதும் புடவைகள் வைத்திருப்பதாகவும் கூறி ஆச்சரியப்பட வைத்தார்.