நடிகை ராஷ்மிகா மந்தனா தான் நடித்த ‘அனிமல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்துள்ளார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து ‘கீதாஞ்சலி’ கேரக்டரில் ராஷ்மிகா நடித்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ராஷ்மிகா தனது சம்பளத்தை மீண்டும் உயர்த்தியதாக தகவல்கள் வெளியாகின. “இதையெல்லாம் பார்த்த பிறகு, நான் உண்மையில் இது பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் கைவசம் தற்போது, புஷ்பா  2, ரெயின்போ, தி கேர்ள்பிரண்ட், சாவா உள்ளிட்ட படங்கள் உள்ளன.