தமிழகத்தில் பாஜக கட்சியைச் சேர்த்த எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , தற்போது அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்களாவது கட்டாயம் சிறைக்குப் போவார்கள் என்று தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில் எச் ராஜாவின் இந்த கருத்து வெளிப்படையாகவே தேர்தல் ஆதாயத்திற்கு அமைச்சர்களை கைது செய்வதை சுட்டிக்காட்டுவதை போல் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.