தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தவர்தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் அமைச்சர் ஆவதற்கு முன்பு நடித்த திரைப்படம் தான் மாமன்னன். இந்தத் திரைப்படம் தான் கடைசி படம் அதன்பிறகு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அமைச்சரான பிறகு இவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அடுத்த மூன்று ஆண்டுகள் நான் நடிக்கப் போவதில்லை. அதன் பிறகு சூழ்நிலை மற்றும் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் படங்களில் நடிக்கலாம் என தெரிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இழந்துள்ளது.